யோகசுவாமிகளின் திருவுளப்படி யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையம் வடக்கின் தலைநகரமாகிய யாழ் நகரத்திலே காங்கேசன்துறை வீதியருகாக 1953 ஆம் ஆண்டு நிறுவப்பெற்றது. தமது முன்னிலையில் இருக்கும்பொழுது அன்பர்கள் மெய்ஞ்ஞான விளக்கம் பெற்றது போலவே, தமது திருவடிக்கலப் பின் பின்னரும் விளக்கம் பெறவேண்டுமென்ற சுவாமிகளின் எல்லையற்ற கருணை இந்த ஞானச் சுடர்விளக்காக மலர்ந்தது. தாம் இந்த ஞானப்பண்ணையை அமைத்தது தமக்குப் பின்னர் தமதன்பர்கள் ‘தட்டுக் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக’ எனக் கூறிச் சுவாமிகள் இதனைத் தெளிவு படுத்தினார்.
இச்சிவதொண்டன் நிலையத்தில் தியானமண்டபம், புராணமண்டபம் என்பவற்றுடன் சுவாமிகள் சிலநாள்கள் உறைந்த அறையும் பூசனைக்குரியதாக உள்ளது. அவ்வறை சுவாமிகள் உபயோகித்த அரும்பொருள்களைக் கொண்ட ஒரு நூதனசாலைக்குரிய பண்புடனும் விளங்குகின்றது.
சுவாமிகள் சிவதொண்டன் நிலையத்தில் சில நாட்கள் உறைந்த அறை
இந்நிலையத்தின் பொறுப்பாளராயிருந்த சுவாமிகளின் வழியடியாரான செல்லத்துரை சுவாமிகள் இச்சிவதொண்டன் நிலையத்திற்குரிய ஒரு தனித்துவமான மரபினை ஏற்படுத்தினார். யாழ் சிவதொண்டன் நிலையம் தனது ஆண்டு விழாவினை ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நான்காம் திகதி கொண்டாடுகின்றது.
எங்கள் ஆசான் அருள்மொழி
கடவுளால் ஒன்று செய்யமுடியாது. ஆன்மாவை விட்டுப் பிரிந்திருக்க முடியாது.
DAILY MEDITATION 1.8 It is God who sees as the eye behind our eye. Brahman fills us entirely. - YOGA SWAMIGAL